ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க மூக்கிரட்டையின் இலைகள், வேர்கள் மற்றும் விதைகள் பல்வேறு மருத்துவ தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. தூள், கஷாயம், எண்ணெய் போன்ற பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
மூக்கிரட்டையை உலர்த்தி அரைத்து பொடி தயாரிக்கப்படுகிறது. இந்தப் பொடி செரிமான பிரச்சனைகள், வயிற்று நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் மூக்கிரட்டைப் பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது தேனுடன் சேர்த்து அருந்தலாம்.
கஷாயம் தயாரிக்க மூக்கிரட்டை வேர்கள் மற்றும் இலைகளை வேகவைத்து அதன் சாறு எடுக்கப்படுகிறது. வீக்கம், மூட்டுவலி மற்றும் சிறுநீரக நோய்களுக்கு இந்த கஷாயம் பயனுள்ளதாக இருக்கும்.
மூக்கிரட்டை எண்ணெய் தோல் நோய்கள், படை, அரிப்பு மற்றும் தோலழற்சி போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது மற்றும் தோல் எரிச்சலைத் தணிக்கக்கூடியது.
கூடுதலாக புனர்னவா ஒரு டையூரிடிக் மற்றும் ஆண்டிபிரைடிக் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், பாலியூரியாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தின்படி மூன்று தோஷங்கலான (வாதம், பித்தம் மற்றும் கபம்) ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதற்கும் மூக்கிரட்டை பயன்படுகிறது.
மூக்கிரட்டை கீரையில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் A மற்றும் C அதிகளவு உள்ளது. மேலும் இதில் அதிக அளவிலான உயிரியல் கலவைகள் மற்றும் (Bioactive Compounds) உள்ளன. மேலும் இதில் ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ஸ்டெராய்டுகள் ஆகிய சேர்மங்கள் உள்ளன. இந்த கூறுகள் மூலிகையின் பல மருத்துவ பண்புகளுக்கு பங்களிக்கின்றன.
மூக்கிரட்டையின் பொதுவான பக்க விளைவுகள்:
போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும். இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் உடல் தானாக சரிசெய்து பக்கவிளைவுகள் குறையக்கூடும்.
ஒவ்வாமை மற்றும் எதிர்வினை ஆகும். இது தோல் வெடிப்பு அல்லது அரிப்பு ஆகியவையாகும். இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டால் பயன்பாட்டை நிறுத்தி உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
மூக்கிரட்டை கீரையை அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப் பிடிப்பு, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின்றி மூக்கிரட்டைக் கீரையை உட்கொள்ளக் கூடாது.
கடுமையான சிறுநீரகப் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு இருந்தால் மூக்கிரட்டைக் கீரையை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம்.
மூக்கிரட்டை கீரை தாவரவியல் ரீதியாக Boerhavia Diffusa என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பூக்கும் தாவரமாகும். மூக்கிரட்டை அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் பிற மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மூக்கிரட்டை கீரை அதன் டையூரிடிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் கல்லீரல்-பாதுகாப்பிற்கு பயனுள்ளது மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், கீல்வாதம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு பயன்படுகிறது.
மூக்கிரட்டை கீரை பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் மற்றும் முன்பே நோய் உள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உண்ணலாம். சிலருக்கு செரிமான அசௌகரியம் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற லேசான பக்க விளைவுள் ஏற்படலாம்.